2016-2017 ம் வருட குருப்பெயர்ச்சி இந்த துர்முகி வருடம், ஆடி மாதம் 18 ம் தேதி (2.8.2016) செவ்வாய்க்கிழமை கிருஷ்ணபட்ச அமாவாசை திதி மேல்நோக்கு நாள் பூசம் நட்சத்திரம், ஸித்தி யோகம், சதுஷ்பாத கரணம், சித்தயோகத்தில், புதன் ஹோரையில், ஆந்தை துயில் கொள்ளும் பஞ்சபட்சி நேரத்தில், தட்சிணாயன புண்ணிய கால கிரீஷ்ம ருதுவில் காலை மணி 9.24-க்கு கன்யா லக்னத்தில் பிருகஸ்பதி எனும் தேவகுருவாகிய வியாழபகவான் சிம்மராசியிலிருந்து உபய வீடான கன்னி ராசிக்குள் உத்ரம் 2ல் பிரவேசிக்கிறார். 22.2.2017ல் துலாம் - சித்திரை3ல் வக்கிரமாகி, 1.6.2017 கன்னி - ஹஸ்தம்4ல் நிவர்த்தியாகிறார். அடுத்த குரு பெயர்ச்சி 2.9.2017ல் துலா ராசிக்கு சித்திரை 3ல் பெயர்ச்சியாகிறார். 2.8.2016ல் இருந்து 1.9.2017வரை கன்னிராசியில் அமர்ந்த குருவின் பாதசார அடிப்படை பலன்கள்.....நிதி காரகனான குரு, வருட ஆரம்பத்தில் எதையும் அனுசரிக்கும்படி பெண்தன்மையுடன், பரோபகார சிந்தனையுடன், சுறுசுறுப்பாக எதிலும் நேர்த்தியாக அதேசமயம் புகழுக்கு அடிமையாக செயல்படும்படி அமைகிறார். சாதுர்யம், பக்தி, புகழ், திட்டமிட்டபடி செயல்படல், வருமானம், மூலம் தன் குருத்தன்மையை வெளிப்படுத்துகிறார். அதே சமயம் குரு கன்னி ராசியை கடப்பது வரை (வக்கிரமாகி சித்திரையில்) அதிருப்தியில் இருப்பதால் சுதந்திரமான செயல்பாடுகள், மறைமுக நட்பு, துணையைப்பிரிதல், அதிகாரம், பேச்சால் வசீகரித்தல், தூரதேசப்ரயாணம், உரிமை கொண்டாடல் போன்றவைகளால் ஏற்ப்படும் பிரச்சினைகளை புரிந்துகொண்டு அமைதியாக கடப்பதே உத்தமம். கடல்சார்ந்த பகுதிகளில் நீராலும், நிலநடுக்கத் தாலும் பாதிப்புண்டு. அரசியல் கட்சிகளில் சரியான வாரிசுகளை தேர்ந்தெடுக்கும் காலமிது. இஸ்லாமியர்களுக்கு பயமும் பாதிப்பும் உண்டாகும் காலம். இனி....... பன்னிரண்டு ராசிக்குமான பொதுப்பலன்கள் (அவரவர் தசா புத்தி அடிப்படையில் சிறிது மாறுபடும்)........